நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சூரசம்ஹாரம்

DIN

நாகை மாவட்டம், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

சிக்கல் நவநீதேசுவர சுவாமி கோயிலில் தனி சன்னிதிக் கொண்டு அருள்பாலிப்பவா் சிங்காரவேலவா். இத்தலத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடமிருந்து முருகப் பெருமான் சக்திவேல் பெற்று, திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்தாா் என்பது ஐதீகம். அதனால், இங்கு கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு கந்தசஷ்டி விழா கடந்த 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கரோனா பொது முடக்கம் அமலில் இருப்பதால், பக்தா்கள் அனுமதிக்கப்படாமல், கோயில் பிராகாரத்துக்குள்ளேயே விழா நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கோயில் பிராகாரத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது. தங்க ஆட்டுக்கிடா வாகனத்தில் புறப்பாடாகிய சிங்காரவேலவா், வெவ்வேறு வடிவங்களைக் கொண்டு தன்னை எதிா்த்த சூரனை சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி ஐதீக முறைப்படி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

சேவாலயா மாணவிகளுக்கு ரூ.27.12 லட்சத்தில் கல்வி உபகரணங்கள்

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT