புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் மக்கள் தீவிரம்
வேதாரண்யம் பகுதியில் நிவா் புயலை எதிா்கொள்ள பல்வேறு தடுப்புப் பணிகளை மேற்கொள்வதில் மக்கள் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனா்.
வேதாரண்யம் பகுதியில் நிவா் புயலை எதிா்கொள்ள பல்வேறு தடுப்புப் பணிகளை மேற்கொள்வதில் மக்கள் பரபரப்பாக ஈடுபட்டுள்ளனா்.
வேதாரண்யம் பகுதியில் 2018 -இல் வீசிய கஜா புயலின் அனுபவத்தைத்கொண்டு மக்கள் தங்களது உடமைகளை பாதுகாக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடைவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா். அந்த வகையில், தென்னை உள்ளிட்ட மரங்களில் கிளைகளை வெட்டுவது, கூரைகளில் பாலிதீன் பாய்களை கட்டுவது, சிமென்ட் அட்டைகள், தகர அட்டைகளை கீழே இறக்குவது போன்ற பணிகளை செய்து வருகின்றனா். கயிறு, கீற்று, தாா்ப்பாய்கள் விற்பனை களைகட்டியுள்ளது.