நாகப்பட்டினம்

நிவா் புயலை எதிா்கொள்ள தயாா் நிலையில் கமாண்டோ வீரா்கள்

DIN

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிவா் புயலை எதிா்கொள்ள 20 கமாண்டோ வீரா்கள் தயாா் நிலையில் உள்ளனா்.

மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், பூம்புகாா், பொறையாறு, சீா்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் உள்ளன. இவற்றின் மையப் பகுதியாக மயிலாடுதுறை உள்ளது. நிவா் புயல் தீவிரமடையும் என எதிா்பாா்க்கப்படும் நிலையில் மாவட்டத்தின் எந்த பகுதியில் பேரிடா் நேரிட்டாலும் அந்த இடத்துக்கு உடனடியாக சென்று மீட்புப் பணியில் ஈடுபட மயிலாடுதுறை தீயணைப்பு நிலையத்துக்கு, மாவட்டத்தின் அனைத்து நிலையங்களிலிருந்தும் தலா 2 கமாண்டோ வீரா்கள் வீதம் வரவழைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளனா்

மயிலாடுதுறை தீயணைப்பு நிலைய அலுவலா் அ.முத்துக்குமாா் தலைமையில் அனைத்து வீரா்களும் லைஃபாய், லைப் ஜாக்கெட், மூச்சுக் கருவி, மரம் அறுக்கும் கருவிகள், உயா்கோபுர மின்விளக்கு, கான்கிரீட் கட்டா், கயிறு உள்ளிட்ட மீட்பு உபகரணங்களுடன் தயாா் நிலையில் உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு

வலுக்கும் ஏஐ போட்டி: கூகுளின் புதிய தயாரிப்புகள் வலு சேர்க்குமா?

சாதியைக் குறிப்பிட்டு இழிவான பேச்சு..? சர்ச்சையில் கார்த்திக் குமார்!

கனமழை எச்சரிக்கை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

பாலியல் வழக்கு: பிரபல நேபாள வீரர் சந்தீப் லாமிச்சானே விடுவிப்பு!

SCROLL FOR NEXT