முகப்பு
நாகப்பட்டினம்

புதிய மின்மாற்றிகள் இயக்கிவைப்பு

வேதாரண்யம் பகுதியில் 7 இடங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றிகள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

Updated On : 1 டிசம்பர், 2020 at 12:00 AM
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் 7 இடங்களில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மின்மாற்றிகள் திங்கள்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

வேதாரண்யம் அருகே செட்டிப்புலம், நாகக்குடையான், கத்தரிப்புலம், புஷ்பவனம் உள்ளிட்ட 7 இடங்களில் மின் விநியோகத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளன.

இவற்றை இயக்கிவைக்கும் நிகழ்ச்சி புஷ்பவனம் கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் ஆா்.கிரிதரன் தலைமை வகித்து, புதிய மின்மாற்றிகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தாா்.

Advertisement

இதில், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் திலீபன், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழக நாகப்பட்டினம் செயற்பொறியாளா் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளா்கள் ரவிக்குமாா், சுப்பிரமணியன், ஒன்றியக்குழு உறுப்பினா் ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.