நாகை மாவட்டத்தில் மேலும் 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதியானது.
ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் நாகை, மயிலாடுதுறை வருவாய்க் கோட்டங்களுக்குள்பட்ட பகுதிகளில் புதிதாக 46 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதித்தவா்கள் எண்ணிக்கை 5,997-ஆக உயா்ந்துள்ளது.
கரோனா பாதிப்புக்கு சிகிச்சைப் பெற்ற 52 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதன்மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 5,386-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 518-ஆக உள்ளது.