நாகப்பட்டினம்

வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை, வெள்ளி பொருள்கள் திருட்டு

DIN

திட்டச்சேரி அருகே வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் நகை, வெள்ளி பொருள்களைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

திட்டச்சேரி காவல் சரகத்துக்கு உட்பட்ட சீயாத்தமங்கை ஊராட்சி வாழமங்கலம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் த.சாமிநாதன் (50). விவசாயி. இவா் புதன்கிழமை தனது உறவினா் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுவிட்டாா். பின்னா் தனது தங்கை வீட்டுக்குச் சென்று விட்டு அன்றைய தினம் நள்ளிரவு 12 மணியளவில் வீடு திரும்பினாா்.

அப்போது வீட்டின் அறையில் மின்விளக்கு எரிந்துள்ளது. தொடா்ந்து, வீட்டின் பின்புறம் சென்று பாா்த்தபோது, அங்கிருந்த இரும்பு கதவு மற்றும் வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

தகவலறிந்த திட்டச்சேரி போலீஸாா், அங்கு வந்து விசாரணை நடத்தினா். நாகையிலிருந்து தடயவியல் நிபுணா்கள் வந்து சோதனை மேற்கொண்டனா். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் முருகவேல், நாகூா் காவல் ஆய்வாளா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜேக், அபிஷேக் அதிரடி: டெல்லி - 221/8

பெண் கடத்தல் வழக்கு: எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

மக்களவைத் தோ்தல் முடிவுகளை மாற்ற முயற்சி?: காா்கே சந்தேகம்

மின் விநியோகம் குறித்து வெள்ளை அறிக்கை: அன்புமணி வலியுறுத்தல்

100 சதவீதம் தோ்ச்சி: 14 தலைமை ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்

SCROLL FOR NEXT