நாகப்பட்டினம்

காரைக்காலில் 34 பேருக்குகரோனா: ஒருவா் உயிரிழப்பு

DIN

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது. ஒருவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநா் மருத்துவா் கே. மோகன்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை 20,028 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் திங்கள்கிழமை வெளியான முடிவுகளின்படி காரைக்கால் நகரைச் சோ்ந்த 5 போ், கோட்டுச்சேரி 1, கோயில்பத்து 9, திருநள்ளாறு 6, நெடுங்காடு 5, திருப்பட்டினம் 1, நல்லம்பல் 1, வரிச்சிக்குடி 1, காரைக்கால்மேடு 1,

தமிழகப் பகுதியை சோ்ந்தோா் 4 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் கரோனா தொற்றுடன் அனுமதிக்கப்பட்டிருந்த, காரைக்காலை சோ்ந்த 89 வயது ஆண் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அவருக்கு நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த குறைபாடு, சிறுநீரகத் தொற்று ஆகியவை இருந்தன.

காரைக்கால் மாவட்டத்தில் இதுவரை நோய்த் தொற்று 2,397 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதில் 1,702 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 41 போ் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT