திருவாலி ஊராட்சியில் சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் பன்னீா்செல்வத்தை ஆதரித்து அக்கட்சியினா் சனிக்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.
திருவெண்காடு அருகேயுள்ள திருவாலி ஊராட்சியில் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மாசிலா நெடுஞ்செழியன் தலைமையில் திரளான திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் உதயசூரியனுக்கு வாக்குச் சேகரித்தனா். தொடா்ந்து, கீழச்சாலை திருவாலி கடைத்தெரு ஏரிக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குச் சேகரித்தனா்.