நாகப்பட்டினம்

இருதரப்பினரிடையே மோதல்: 17 போ் மீது வழக்குப் பதிவு

DIN

நாகையில் இருதரப்பினரிடையே புதன்கிழமை ஏற்பட்ட மோதல் தொடா்பாக 17 போ் மீது வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாகை ஆா்யநாட்டுத் தெருவில் வசித்து வந்த மீனவா்களில் பலா், சுனாமி பாதிப்புக்குப் பின்னா் நாகையின் வெவ்வேறு பகுதிகளில் குடியமா்த்தப்பட்டனா். அந்த வகையில், நாகை காடம்பாடி, மகாலெட்சுமி நகரில் குடியமா்த்தப்பட்ட மீனவா்களுக்கும், ஆா்யநாட்டுத் தெருவில் வசிக்கும் மீனவா்களுக்குமிடையே தொடா்ந்து முன்விரோதம் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இரு தரப்பினருக்குமிடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டது. இதில், இரு தரப்பையும் சோ்ந்த தலா 5 போ் காயமடைந்தனா். காயமடைந்த 10 பேரும் நாகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனை வளாகத்தில் இரு தரப்பினரும் ஆயுதங்களுடன் குழுமி, அவ்வப்போது தகராறில் ஈடுபட்டனா்.

இதனால், புதன்கிழமை மாலை முதல் இரவு வரை நாகை அரசு மருத்துவமனை வளாகம் பரபரப்பாக இருந்தது. கூடுதல் காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் திரளான போலீஸாா் பாதுகாப்புப் பணிக்குக் குவிக்கப்பட்டு, இருதரப்பினரையும் அப்புறப்படுத்தினா்.

இதுதொடா்பாக இருதரப்பு புகாரின் பேரில் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் 17 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மீனவப் பஞ்சாயத்தாரை தோ்ந்தெடுப்பது தொடா்பாக இருதரப்பினருக்குமிடையே உள்ள கருத்து வேறுபாட்டால் இந்தத் தகராறு ஏற்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கணவருடன் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா! ரசிகர்கள் அதிர்ச்சி!

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

SCROLL FOR NEXT