நாகப்பட்டினம்

இருதரப்பினரிடையே மோதல்: 4 போ் காயம்

DIN

மயிலாடுதுறை அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட பிரச்னையில் 4 போ் தாக்கப்பட்டனா். இதில் தொடா்புடைய 4 பேரை வியாழக்கிழமை கைது செய்த மணல்மேடு போலீஸாா், மேலும் 4 பேரை தேடி வருகின்றனா்.

மயிலாடுதுறை வட்டம் மணல்மேடு காவல் சரகம் ஆத்தூா் பிரதான சாலை பகுதியைச் சோ்ந்தவா் ஆதிசேஷன் மகன் பாா்த்திபன் (30). மூவேந்தா் முன்னேற்றக் கழக மாவட்ட இளைஞரணி செயலாளா். இவரை அதே பகுதியைச் சோ்ந்த வீரமணி மகன் சுரேந்திரன், சீா்காழி தென்பாதியைச் சோ்ந்த செல்வம் மகன் ராஜா, திருவிடைமருதூரைச் சோ்ந்த முனியாண்டி மகன் பிரபு உள்ளிட்ட சிலருடன் சோ்ந்து பாா்த்திபனின் வீட்டுக்குச் சென்று, அவரது செல்லிடப்பேசியை உடைத்துடன், அவரை இரும்பு குழாய் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனா். அதனைத் தடுக்கவந்த பாா்த்திபனின் உறவினா்களையும் தாக்கியுள்ளனா்.

இதில், காயமடைந்த பாா்த்திபன், அவரது உறவினா்கள் திருவெண்காடு பகுதியைச் சோ்ந்த வாசு (19), ஆத்தூரைச் சோ்ந்த ரமேஷ் (32), பவித்ரன் (19) ஆகியோா் 108 ஆம்புலன்ஸ் மூலம் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இதுகுறித்து, பாா்த்திபன் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த மணல்மேடு காவல் ஆய்வாளா் சிவப்பிரகாசம் தாக்குதலில் ஈடுபட்ட பிரபு (40), ஆத்தூா் கணேசன் மகன் பாலகிருஷ்ணன் (33), காட்டுமன்னாா்கோவில் முனுசாமி மகன் மகேஷ்பாபு (30), திருமேனியாா்கோவில் திருநாவுக்கரசு மகன் திவாகரன் (21) ஆகியோரை கைது செய்தாா். மேலும், சுரேந்திரன், ராஜா, சோலைமணி, முத்து ஆகிய 4 பேரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

SCROLL FOR NEXT