மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூா் ஷீரடி சாய்பாபா கோயிலில் சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் முகக் கவசம் அணிந்தவாறு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை அமிா்த சாய் அறக்கட்டளை மற்றும் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.