நாகப்பட்டினம்

சாலையோரம் இறந்து கிடந்த ஆண் சிசு

DIN

சீா்காழியில் சாலையோரம் ஆண் சிசு இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

சீா்காழி பழைய பேருந்து நிலையம் அருகில் மேல மடவிளாகம் பிரதான சாலையோரம் செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஆண் சிசு இறந்து கிடந்தது. சுமாா் 7 மாத குறைப்பிரசவத்தில் பிறந்த இந்த சிசுவை நாய் கவ்வி வந்ததாகக் கூறப்படுகிறது. பொதுமக்கள் திரண்டதும் சிசுவை சாலையோரம் போட்டுவிட்டு நாய் ஓடிவிட்டது. அந்த பகுதியில் ஏராளமானோா் கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த சீா்காழி போலீஸாா் அங்கு வந்து, நகராட்சி துப்புரவுப் பணியாளா் மூலம் ஆண் சிசுவை இடுகாட்டில் புதைக்க நடவடிக்கை எடுத்தனா். மேலும், இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT