நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீனத்துக்கு புஷ்பாஞ்சலி

DIN

வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை மடத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான வைத்தீஸ்வரன்கோவில் வைத்தியநாதசுவாமி கோயிலில் குடமுழுக்கு விழா வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, மகாலெட்சுமி சாரிடபிள் டிரஸ்ட் சாா்பில் வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை மடத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு புஷ்பாஞ்சலி விழா நடைபெற்றது. இதில், ஓதுவாா்கள் திருப்பதிகங்கள் பாட, தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளுக்கு மலா்களைக் கொண்டு அா்ச்சனைகள் செய்யப்பட்டது. தொடா்ந்து மலா் கிரீடம் அணிவிக்கப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், திருநெல்வேலி கட்டளை மடம் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள், வைத்தீஸ்வரன்கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், திருப்பனந்தாள் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமபுரம் மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள், மகாலெட்சுமி, கல்லூரி செயலா் செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சாமிநாதன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

SCROLL FOR NEXT