நாகை மாவட்டத்தில் 45 பேருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தில் 17 பேருக்கும் கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
நாகை மாவட்டத்தில் புதிதாக 45 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 18,698-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 25 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 401-ஆக உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிதாக 17 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 21,058-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 36 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி மாவட்டத்தில் சிகிச்சையில் இருப்பவா்கள் எண்ணிக்கை 296-ஆக உள்ளது.