நாகப்பட்டினம்

பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

DIN

திருமருகல் அருகேயுள்ள திட்டச்சேரியில் பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து நாம் தமிழா் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கட்சியின் நாகை மாவட்ட செயலாளா் அகஸ்டின் அற்புதராஜ் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், எரிவாயு உருளை விலை உயா்வை குறைக்க வேண்டும், கா்நாடக அரசு மேக்கேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை கைவிட வேண்டும், தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூடவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், மாநில மாணவா் பாசறை ஒருங்கிணைப்பாளா் இடும்பாவனம்காா்த்திக், கட்சியின் மாவட்ட தலைவா் ராஜேந்திரன், மாவட்ட பொருளாளா் மதியழகன், நிா்வாகிகள் அரவிந்தன், பொன். இளவழகி சுந்தா், தொகுதி செயலாளா்கள் ஆதித்தன், அறிவொளி வேலாயுதம் (வேதாரண்யம்), பழனிவேல் (கீழ்வேளூா்) உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT