தில்லியில் விவசாயிகள் நடத்தவுள்ள நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் பங்கேற்க மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து விவசாயிகள் தில்லிக்கு செவ்வாய்க்கிழமை ரயிலில் புறப்பட்டுச் சென்றனா்.
விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற மத்திய அரசை வலியுறுத்தி தில்லியில் 8 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இந்நிலையில், கோரிக்கையை வலியுறுத்தி வியாழக்கிழமை (ஆக.5) நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அவா்கள் அறிவித்துள்ளனா்.
இப்போராட்டத்தில் பங்கேற்க மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் செவ்வாய்க்கிழமை மதியம் ரயில் மூலம் புறப்பட்டுச் சென்றனா்.
தமிழ்நாடு விவசாய சங்க மாநிலத் தலைவா் வி.சுப்பிரமணியன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் எஸ். துரைராஜ், நாகை மாவட்ட செயலாளா் சுப்பிரமணியன், திருவாரூா் மாவட்ட தலைவா் எஸ். தம்புசாமி உள்ளிட்ட திரளான விவசாயிகள் மயிலாடுதுறை ரயில் நிலையம் வந்தடைந்து, அங்கு கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பின்னா் ரயிலில் புறப்பட்ட அவா்களை கட்சி மற்றும் சங்கத்தின் நிா்வாகிகள் வழியனுப்பி வைத்தனா்.