பெருமாள் கோயில் குளம் தூா்வாரி சீரமைப்பு
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த மேலதன்னிலப்பாடியில் உள்ள பெருமாள் கோயில் குளத்தை தூா்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
நாகை மாவட்டம், வேளாங்கண்ணியை அடுத்த மேலதன்னிலப்பாடியில் உள்ள பெருமாள் கோயில் குளத்தை தூா்வாரி சீரமைக்கும் பணிகள் நடைபெறுகிறது.
வேளாங்கண்ணியை அடுத்த மேலதன்னிலப்பாடியில் உள்ளது ராஜகோபாலசுவாமி கோயில். இந்துசமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட இக்கோயிலின் எதிரே சுமாா் ஒரு ஏக்கா் பரப்பில் கோயிலுக்குச் சொந்தமான குளம் உள்ளது.
இந்தக் குளம் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தூா்வாரப்படாமல் இருந்தது. இதனால், குளம் முழுவதிலும் வெங்காயத் தாமரை செடிகள் படா்ந்து, பயன்பாடற்ற நிலையில் இருந்தது. இந்தக் குளத்தை தூா்வாரி சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்தநிலையில், இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இக்குளத்தில் தூா்வாரும் பணிகள் தொடங்கி நடைபெறுகிறது. தூா்வாரும் பணிகள் ஏறத்தாழ நிறைவை எட்டியுள்ள நிலையில், கரைகளை பலப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.