நாகை, மயிலாடுதுறையில் 3 பேருக்கு கரோனா
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதியானது.
நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வரை 8,447 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 3 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 8,450- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 3 போ் குணமடைந்து திங்கள்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,256 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 62 ஆக உள்ளது.