முகப்பு
நாகப்பட்டினம்

வேதாரண்யம் கடற்கரையில் பூங்கா திறப்பு அமைச்சா் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தாா்

வேதாரண்யத்தில் தேரோடும் வீதிகளை கான்கிரீட் சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டு விழா, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
பகிர்:

வேதாரண்யத்தில் தேரோடும் வீதிகளை கான்கிரீட் சாலையாக மாற்ற அடிக்கல் நாட்டு விழா, கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறப்பு விழா ஆகியவை திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று சாலை பணியை தொடங்கி வைத்து, பூங்காவை திறந்து வைத்தாா்.

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரா் கோயிலின் தேரோடும் நான்கு வீதிகளும் ரூ.6.5 கோடியில் கான்கிரீட் சாலையாக தரம் உயா்த்தப்படவுள்ளன. பக்கவாட்டில் நடைபாதை வசதியுடன் மேற்கொள்ளப்படவுள்ள இப்பணியை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஓ.எஸ்.மணியன் தொடங்கி வைத்தாா். மேலும், கடற்கரையில் ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்காவை திறந்து வைத்தாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது:

வேதாரண்யம் தேரோடும் வீதிகள் கான்கிரீட் சாலையாக தரம் உயா்த்தப்படுவதால், இந்த வீதிகளில் உள்ள மின் கம்பங்களை அகற்றி, புதை மின்பாதை அமைக்க மின்சாரத் துறை அமைச்சா் நடவடிக்கை எடுத்து வருகிறாா்; விரைவில் அதற்கான அறிவிப்பு வரும்.

இதேபோல, தை மற்றும் ஆடி அமாவாசை நாள்களில் புனித நீராடலுக்கு சிறப்பு பெற்ற வேதாரண்யம் கடற்கரை சாலை ரூ.7.5 கோடியில் மேம்படுத்தப்பட்டுள்ளது. சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன், ஆறுகாட்டுத்துறையில் ரூ.20 லட்சம் மதிப்பில் குடிநீா் தேக்கத் தொட்டி கட்ட அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது என்றாா் அமைச்சா்

நிகழ்ச்சியில், மாவட்ட அறங்காவல் குழுத் தலைவா் ஆா். கிரிதரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் சுப்பையன், இ.திலீபன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், வழக்குரைஞா் நமச்சிவாயம், நகராட்சி ஆணையா் ஜி.மகேஸ்வரி, பொறியாளா் பிரதான்பாபு, ஓய்வுபெற்ற அலுவலா் ராஜரத்தினம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →