நாகையில் 7ஆவது நாளாக அரசு ஊழியர்கள் சாலை மாறியல்: 28 பேர் கைது
நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
நாகையில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 28 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்த வேண்டும், அங்கன்வாடி ஊழியர்கள், செவிலியர்கள் ஊர்ப்புற நூலகர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலிபுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பிப்-2ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக 7 வது நாளாக கோரிக்கைகளை வலியுறுத்தி நாகையில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த 18 பெண்கள் உள்ளிட்ட 28 பேரை போலீஸார் கைது செய்தனர்.