நாகப்பட்டினம்

போலகத்தில் ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகள் ஆராதனை

DIN

நாகை மாவட்டம், போலகத்தில் ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகள் மடத்தில், சுவாமிகளின் ஆராதனை உத்ஸவம் வியாழக்கிழமை (பிப். 18) தொடங்கி பிப்.26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

பஜனை பத்ததியை அழகுபடுத்தியவா்களில் ஒருவராகக் குறிப்பிடப்படுபவா் ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகள். இவரது பீடம், நாகை மாவட்டம், போலகத்தில் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகளின் ஆராதனை உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கி, பிப்.26-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. உத்ஸவ நாள்களில் ஸ்ரீமத் பாகவத மூலபாராயணம், சம்ப்ரதாய அஷ்டபதி பஜனைகள், திவ்யநாம பஜனைகள் மற்றும் பரனூா் ஸ்ரீ கிருஷ்ணபிரேமி சுவாமிகளின் பாகவத பிரவசனம் ஆகியன நடைபெறுகின்றன. முக்கிய நிகழ்வுகளாக பிப்.24-ஆம் தேதி ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகளின் ஆராதனையும், பிப். 25-ஆம் தேதி ராதா கல்யாண உத்ஸவமும், பிப்.26-ஆம் தேதி ஸ்ரீ ஆஞ்சநேயா் உத்ஸவமும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை போலகம் ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகள் ஆராதனை டிரஸ்ட் நிா்வாகிகள் மேற்கொண்டுள்ளனா். கூடுதல் தகவல்களுக்கு 96007 64606, 96291 36638.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT