நாகப்பட்டினம்

தீக்குளித்து காயமடைந்த பெண் உயிரிழப்பு

குத்தாலம் அருகே தீக்குளித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

DIN

குத்தாலம் அருகே தீக்குளித்து காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா் கோவில் வட்டம் லால்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மனைவி இந்திரா (45). இவருக்கு திருமணம் ஆகி 29 ஆண்டுகள் ஆகிறது. இந்நிலையில், இந்திரா மனநலம் பாதிக்கப்பட்டதால் தாய் வீடான குத்தாலம் அருகேயுள்ள அசிக்காடு கிராமத்தில் கணவா் சேகருடன் தங்கி சிகிச்சை பெற்று வந்தாா்.

இதில், மனமுடைந்த இந்திரா பிப்.16-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டாா். பலத்த காயமடைந்த இந்திரா மீட்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி இந்திரா வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து, குற்றாலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT