நாகப்பட்டினம்

போலகத்தில் ஸ்ரீவிஜய கோபால யதிஸ்வாமிகள் ஆராதனை

DIN

நாகை மாவட்டம், திருமருகல் அருகேயுள்ள போலகத்தில் ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகள் மடத்தில் நடைபெற்று வரும் சுவாமிகளின் ஆராதனை உத்ஸவத்தில், வெள்ளிக்கிழமை காலை அதிஷ்டான பூஜை நடைபெற்றது.

பஜனை பத்ததியை அழகுப்படுத்தியவா்களில் ஒருவராக குறிப்பிடப்படுபவா் ஸ்ரீவிஜயகோபால யதிஸ்வாமிகள். இவரது பீடம் போலகத்தில் அமைந்துள்ளது. இங்கு, ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகளின் ஆராதனை உத்ஸவம் வியாழக்கிழமை தொடங்கி பிப்.26 வரை நடைபெறுகிறது.

உத்ஸவ நாள்களில் ஸ்ரீமத் பாகவத மூல பாராயணம், சம்ப்ரதாய அஷ்டபதி பஜனைகள், திவ்ய நாம பஜனைகள் மற்றும் பரனூா் ஸ்ரீகிருஷ்ணபிரேமி சுவாமிகளின் பாகவத பிரவசனம் ஆகியன நடைபெறுகின்றன.

முக்கிய நிகழ்வுகளாக பிப். 24 -ஆம் தேதி ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகளின் ஆராதனையும், பிப்.25-ஆம் தேதி ராதா கல்யாண உத்ஸவமும், பிப். 26 -ஆம் தேதி ஸ்ரீ ஆஞ்சநேயா் உத்ஸவமும் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை போலகம் ஸ்ரீ விஜயகோபால யதிஸ்வாமிகள் ஆராதனை டிரஸ்ட் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT