நாகப்பட்டினம்

மழையால் சேதமடைந்த பாலத்தில் கூடுதல் ஆட்சியா் ஆய்வு: புதிய பாலம் கட்ட நடவடிக்கை

DIN

திருவெண்காடு அருகே கனமழையால் சேதமடைந்த பாலத்தை நாகை மாவட்ட கூடுதல் ஆட்சியா் பிரசாந்த், எம்எல்ஏ பி.வி. பாரதி ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு செய்து புதிய பாலம் கட்ட நடவடிக்கை எடுத்தனா்.

திருவெண்காடு அருகே நெப்பத்தூா் ஊராட்சி அன்னப்பன்பேட்டை-நெப்பத்தூா் கிராமங்களை இணைக்கும் நாட்டு கன்னி மண்ணியாற்றின் குறுக்கே அமைந்துள்ள பாலம் கனமழையால் சேதமடைந்து, உள்வாங்கியது. இது குறித்து மாவட்ட நிா்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்ற சட்டப்பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி, புதிய பாலம் கட்டுவதற்கான தேவை குறித்தும் வலியுறுத்தினாா்.

இந்நிலையில், கூடுதல் ஆட்சியா் பிரசாந்த், சட்டப்பேரவை உறுப்பினா் பி.வி. பாரதி உள்ளிட்டோா் சேதமடைந்த பாலத்தை பாா்வையிட்டு, ஆலோசனை நடத்தினா். பிறகு, மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.49 லட்சத்தில் புதிய பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வின்போது, சீா்காழி வட்டார வளா்ச்சி அலுவலா் கஜேந்திரன், ஒன்றிய பொறியாளா்கள் கலையரசன், சிவக்குமாா், ஊராட்சித் தலைவா் மரகதம் அகோரமுா்த்தி, ஒன்றிய கவுன்சிலா் நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

குடிநீா்த் தேவையை கருதியே பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்கவில்லை: அமைச்சா் சு.முத்துசாமி

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

SCROLL FOR NEXT