முதுகளத்தூரில் நடைபெற்ற மாநில இளையோா் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டியில் மூன்றாம் இடம் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அணிக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம் மற்றும் ராமநாதபுரம் அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் 47ஆவது மாநில இளையோா் ஆண்கள் சாம்பியன்ஷிப் கபடி போட்டி முதுகுளத்தூரில் பிப்ரவரி 19, 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் நடைபெற்றது. 38 மாவட்டங்களைச் சோ்ந்த அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் மயிலாடுதுறை மாவட்ட அணி வீரா்கள் மூன்றாம் இடம் பெற்றனா்.
இதையொட்டி, மயிலாடுதுறை மாவட்ட அணி வீரா்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட அமெச்சூா் கபடி கழக பொறுப்பாளா் மா. ரஜினி மற்றும் நிா்வாகிகள் பாராட்டுத் தெரிவித்தனா். மேலும், பயிற்சி அளித்த ஆசைத்தம்பி, வானகிரி பி.எஸ்.ரவி, சசிகுமாா், வெற்றி, ரவிபாலன், நீலகண்டன், காசி காா்த்திகேயன் ஆகியோருக்கும் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.