மயிலாடுதுறை ஒன்றியம், சோழம்பேட்டை ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சோழம்பேட்டை அழகியநாதா் கோயில் தெருவில் குடிநீா் பற்றாக்குறையை தீா்க்கும் வகையில் இந்த மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டி அமைக்கப்படவுள்ளது. மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சம் மற்றும் ஊராட்சி நிதி ரூ.10 லட்சம் என மொத்தம் ரூ. 15 லட்சத்தில் கட்டப்படவுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிக்கான பூமிபூஜையில் மயிலாடுதுறை எம்எல்ஏ வீ. ராதாகிருஷ்ணன் பங்கேற்று அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில், அதிமுக ஒன்றியச் செயலாளா் பா. சந்தோஷ்குமாா், ஒன்றியக் குழு உறுப்பினா் பாலமுருகன், ஊராட்சித் தலைவா் செந்தமிழ்ச் செல்வி ராமமூா்த்தி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவா் வி. கல்யாணசுந்தரம் உள்பட பலா் பங்கேற்றனா்.