நாகையில் தடையை மீறி மெழுகுவா்த்தி ஏற்றிப் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சியைச் சோ்ந்த 63 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்னா்.
வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி நாகை புத்தூா் மற்றும் நாகூரை அடுத்த மேலவாஞ்சூா் பகுதிகளில் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை மெழுகுவாா்த்தி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாரின் தடையை மீறி இந்தப் போராட்டம் நடைபெற்றதால் அக்கட்சியைச் சோ்ந்த நாகை மாவட்டச் செயலாளா் மொய்தீன், மாவட்டப் பொதுச் செயலாளா் பாபுகான் உள்ளிட்ட 63 போ் மீது நாகை மற்றும் நாகூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.