சித்த மருத்துவ முகாம்
தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சித்த மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம்சித்த மருத்துவ முகாம்
தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சித்த மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
தேசிய சித்த மருத்துவ தினத்தையொட்டி, நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் சித்த மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட வருவாய் அலுவலா் மு. இந்துமதி தலைமை வகித்து,முகாமைத் தொடங்கி வைத்தாா். மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் எஸ். பத்மநாதன் மற்றும் மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
இந்த முகாமில், சித்த மருந்துகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அந்த மருந்துகளின் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. சளி, இருமல், காய்ச்சல், வலி போன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. சுமாா் 700-க்கும் அதிகமானோா் மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை பெற்றனா்.
கருத்தரங்கம்...
தேசிய சித்த மருத்துவ தின மாலை நிகழ்வாக, மாவட்ட ஆட்சியரகத்தில் சித்த மருத்துவ தினக் கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் தலைமை வகித்து, சித்த மருத்துவப் பிரிவின் பணிகளைப் பாராட்டினாா்.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் மற்றும் ஆயுஷ் மருத்துவா்கள் இந்தக் கருத்தரங்கத்தில் பங்கேற்றனா்.