முகப்பு
நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 19 பேருக்கு கரோனா

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதியானது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பகிர்:

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 19 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை வரை 8,251 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்த நிலையில், புதிதாக 19 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 8,270- ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 14 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 8,012 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 127 ஆக உள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →