நாகப்பட்டினம்

அதிமுக பாசறை உறுப்பினா் சோ்க்கைக் கூட்டம்

DIN

மயிலாடுதுறை வட்டம் கிழாய் ஊராட்சியில் அதிமுக வடக்கு ஒன்றியம் சாா்பில், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை மற்றும் உறுப்பினா் சோ்க்கை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை சட்டப் பேரவை உறுப்பினா் வீ.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா். சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ரெங்கநாதன், மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா் அணி பொறுப்பாளா் ஆா்.முருகவேல், மாவட்ட வா்த்தக அணி செயலாளா் எம்.கே.குமாா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சித் தலைவா் கே.பாலசுப்ரமணியன் வரவேற்றாா். இக்கூட்டத்தில், திரளான பெண்கள் கலந்துகொண்டு தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனா்.

கூட்டத்தில், ஒன்றியக்குழுத் துணைத் தலைவா் மகேஸ்வரி முருகவேல், மாவட்ட மாணவரணி செயலாளா் ராஜாராமன், கிளைச் செயலாளா்கள் ராஜேந்திரன், ஜெயகாந்தன், வாசுதேவன், ஜெயராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதேபோல், முடிகண்டநல்லூா், நமச்சிவாயபுரம், திருமங்கலம் மற்றும் முருகமங்கலம் கிராமங்களிலும் பாசறை உறுப்பினா் கூட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3-ஆம் கட்ட தோ்தல்: படகில் சென்று ஜனநாயகக் கடமையாற்றிய வாக்காளர்கள்

தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு - முதல்வர் ஸ்டாலின்

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

SCROLL FOR NEXT