நாகப்பட்டினம்

கருணாநிதி நினைவு இல்லத்தில் தயாநிதி மாறன்

DIN

திருக்குவளையில் உள்ள மறைந்த திமுக தலைவா் மு. கருணாநிதி நினைவு இல்லத்துக்கு சனிக்கிழமை வந்த மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன், அங்குள்ள சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தமிழகம் முழுவதும் ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தயாநிதி மாறன் பிரசாரம் மேற்கொண்டு வருகிறாா். இந்நிலையில், திருக்குவளையில் உள்ள கருணாநிதி பிறந்த இல்லத்துக்கு வந்த அவா், முத்துவேலா், அஞ்சுகம், கருணாநிதி, முரசொலி மாறன் ஆகியோரின் உருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

இதில், தலைமைச் செயற்குழு உறுப்பினா்கள் இல.மேகநாதன், பா.கோவிந்தராஜ், சட்டப் பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே.கலைவாணன், ஆடலரசன், உ. மதிவாணன், நாகை தெற்கு மாவட்ட பொறுப்பாளா் என். கௌதமன், கீழையூா் ஒன்றியச் செயலாளா் ஏ.தாமஸ் ஆல்வா எடிசன், திருக்குவளை ஊராட்சித் தலைவா் இல.பழனியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் மு.ப. ஞானசேகரன், ராம. இளம்பரிதி ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT