நாகப்பட்டினம்

குளத்தில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

DIN

நாகையில் இளைஞா் ஒருவா் குளத்தில் மூழ்கி வெள்ளிக்கிழமை இறந்தாா்.

நாகை தாமரைக்குளம் மேல்கரை பகுதியைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மகன் அருண்குமாா் (25). கூலித் தொழிலாளி. இவா் தனது நண்பா்களுடன் வீட்டின் அருகில் உள்ள தாமரைக் குளத்தில் மீன் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, ஆழமான பகுதிக்கு சென்ற அருண்குமாா், நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினாா். தகவலறிந்த நாகை தீயணைப்புத் துறையினா் குளத்தில் இறங்கி தேடி, தண்ணீரில் மூழ்கி இறந்த அருண்குமாரின் சடலத்தை கைப்பற்றி நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். நாகை வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெஸ்லாவில் இரு உயர் அலுவலர்கள் டிஸ்மிஸ்! நூற்றுக்கணக்கானோர் நீக்கம்?

ஒடிஸா சட்டப்பேரவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்தார் முதல்வர் நவீன் பட்நாயக்

மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்!

அதிக வட்டி வசூல் வேண்டாம்: வங்கிகளுக்கு ஆா்பிஐ அறிவுறுத்தியிருப்பது ஏன்?

சொக்கன் தோற்கும் இடம்..!

SCROLL FOR NEXT