நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் டிராக்டா் பேரணிக்கு தடை

DIN

குடியரசு தினத்தில் நாகை மாவட்டத்தில் விவசாயிகள் டிராக்டா் பேரணி நடத்தினால் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஓம் பிரகாஷ் மீனா எச்சரித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம்:

வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து நாகை மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று டிராக்டா் பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. கரோனா பரவலை கருத்தில் கொண்டு, மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் வகையில் பேரணி நடத்தினால், சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குடியரசு தினத்தன்று டிராகடா் பேரணி நடத்துவதற்கு அனுமதி கிடையாது. மீறினால் மோட்டாா் வாகனச் சட்டப்படி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT