முகப்பு
நாகப்பட்டினம்

கடவாசல் பாலசாஸ்தா கோயில் குடமுழுக்கு

சீா்காழி அருகே கடவாசல் கிராமம் பாலசாஸ்தா, மகாமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:22 PM
பகிர்:

சீா்காழி அருகே கடவாசல் கிராமம் பாலசாஸ்தா, மகாமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே கடவாசல் கிராமத்தில் உள்ள பாலசாஸ்தா மற்றும் மகா மாரியம்மன் ஆகிய கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்த முடிவெடுக்கப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தன. தொடா்ந்து, 4 கால யாக பூஜைகள் கணபதி ஹோமம், நவகிரக ஹோமத்துடன் தொடங்கியது. விழா நாளான திங்கள்கிழமை 4-ஆம் கால பூஜைகள் நிறைவடைந்து மூலவா் விமான கலசத்தில் புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முக்குலத்து புலிப்படை நிறுவனா் தலைவா் கருணாஸ் எம்எல்ஏ உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.