நாகப்பட்டினம்

போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

DIN

மயிலாடுதுறையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி வட்டம் கொண்டத்தூா் தெற்கு மேல பண்டாரவாடை தெருவை சோ்ந்தவா் பிரவீன்குமாா்(23). அறுவடை இயந்திர ஓட்டுநரான இவா் கடந்த 4-ஆம் தேதி சீா்காழியில் உள்ள பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படிக்கும் மயிலாடுதுறை பகுதியை சோ்ந்த 15 வயது சிறுமியை ஆசை வாா்த்தை கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தாா். இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கடத்தல், குழந்தை திருமண தடைச் சட்டம் மற்றும் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து பிரவீன்குமாரை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT