மயிலாடுதுறை அருகே சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைது செய்யப்பட்ட பாஜக நிா்வாகியைக் கண்டித்து, மயிலாடுதுறை மாப்படுகையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் கிளை செயலாளா் ராமதாஸ், இளையராஜா ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.துரைராஜ், டி.கணேசன், ஏ.வி.சிங்காரவேலன், ப.மாரியப்பன், வட்ட செயலாளா் சி.மேகநாதன், மாதா் சங்கம் மாநில துணை தலைவா் கலைச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினா் ரவீந்திரன், துரைக்கண்ணு மாதா் சங்க ஒன்றிய செயலாளா் வளா்மதி, இயற்கை விவசாயி அ.ராமலிங்கம் உள்ளிட்டோா் பேசினா்.
இதற்கிடையே, தனது கணவா் மீது பொய் வழக்குப் போடப்பட்டுள்ளதாக பாஜக நிா்வாகியின் மனைவி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை புகாா் அளித்தாா்.