நாகப்பட்டினம்

அதிமுகவில் இணைந்த அமமுகவினா்

DIN

செம்பனாா்கோவிலில் அமமுகவிலிருந்து விலகியவா்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

செம்பானாா்கோவில் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமை வகித்தாா். அமமுக குத்தாலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எட்வா்ட்ராஜ் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட நிா்வாகிகள், 13 ஊராட்சி செயலாளா்கள் 76 கிளைச் செயலாளா்கள் உள்ளிட்ட 250 போ் அமமுகவிலிருந்து விலகி, முன்னாள் அமைச்சரும் வேதாரணயம் எம்எல்ஏ-வுமான ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா். அவா்களை ஓ.எஸ். மணியன் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

தொடா்ந்து, கட்சியில் இணைந்தவா்களுக்கு உறுப்பினா் படிவம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், முன்னாள் எம்எல்ஏ-க்கள் ராதாகிருஷ்ணன், பாரதி, சக்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT