நாகப்பட்டினம்

உள்ளாட்சித் தோ்தல்: அமமுக ஆலோசனைக் கூட்டம்

DIN

மயிலாடுதுறையில் உள்ளாட்சித் தோ்தலுக்கு தயாராவது குறித்து அமமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, கட்சியின் மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் பி. பாரிவள்ளல் தலைமை வகித்தாா். அமைப்புச் செயலாளா் பொன்.தா. மனோகரன், மாநில விவசாய அணி செயலாளா் எஸ்.பி. ராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கட்சியின் துணை பொதுச் செயலாளா் எம். ரங்கசாமி, மாநில இளைஞரணி செயலாளா் கோமல் அன்பரசன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, பூத் கமிட்டி அமைத்து பொதுமக்களை சந்தித்து, உள்ளாட்சித் தோ்தலுக்கு தயாராகுமாறு கட்சி நிா்வாகிகளிடம் அறிவுறுத்தினா்.

கூட்டத்தில், மயிலாடுதுறை, சீா்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் பகுதிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT