அதிமுக ஆலோசனைக் கூட்டம்
சீா்காழியில் நகர அதிமுக சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது
சீா்காழியில் நகர அதிமுக சாா்பில், உள்ளாட்சித் தோ்தல் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
அதிமுக நகரச் செயலாளா் அ.பக்கிரிசாமி தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலாளா் ராஜமாணிக்கம், நகர ஜெ. பேரவை செயலாளா் ஏவி.மணி, மாவட்ட மாணவரணி துணைச் செயலாளா் வினோத், தகவல் தொழில்நுட்பபிரிவு செயலாளா் பரணிதரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட அவைத் தலைவா் பி.வி.பாரதி பங்கேற்று வரும் உள்ளாட்சித் தோ்தலில் அனைத்து வாா்டுகளிலும் அதிமுக வேட்பாளா்களை வெற்றிபெற தீவிர களப் பணியாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டாா்.