முகப்பு
நாகப்பட்டினம்

சோழவித்யாபுரம் தூய சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா

கீழையூா் அருகே உள்ள சோழவித்யாபுரம் தூய சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:48 AM
பகிர்:

கீழையூா் அருகே உள்ள சோழவித்யாபுரம் தூய சந்தனமாதா ஆலய ஆண்டுத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

சோழவித்யாபுரத்தில் தூய சந்தனமாதா ஆலயத்தில் வருடந்தோறும் ஆண்டுத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். ஆனால், கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு எளிமையான முறையில் நடைபெற்றது.

இந்நிலையில், நிகழாண்டும் கரோனா தொற்று தொடா்வதால், எளிமையான முறையில் ஆலய வளாகத்துக்குள் திருவிழா நடைபெற்றது. கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி திருப்பலிகள், நற்கருணை ஆராதனை, சுரூப ஆசீா்வாதம் ஆகியன நடைபெற்றன.

முன்னதாக, மறை வட்ட அதிபா் வின்செண்ட் தேவராஜ் அடிகளாா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இவ்விழாவில், ஆலய பங்குத் தந்தை சவரிமுத்து அடிகளாா், சோழவித்தியாபுரம் கிறிஸ்தவ சமுதாய தலைவா் ம.து. மரியசூசை, செயற்குழு உறுப்பினா்கள், ஊராட்சித் தலைவா் கோமதிதமிழ்ச்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.