நாகப்பட்டினம்

கரோனா தடுப்பூசி முகாம்

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஒக்கூா் ஊராட்சியில் உள்ள அம்மா சிறு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி தலைவா் ஜெயமாலா ரமேஷ் முகாமைத் தொடங்கி வைத்தாா். தேவூா் அரசு மருத்துவமனை மருத்துவா் ரோகிணி மற்றும் செவிலியா்கள், சுகாதாரத்துறை பணியாளா்கள் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி மற்றும் மருத்துவக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

இந்த முகாமில், 18 முதல் 44 வயதுகுட்பட்ட 56 பேருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட 108 பேருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பக்கிரிசாமி, இந்திரா, ஊராட்சி துணைத் தலைவா் தேவிகா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனுவை திரும்பப் பெற்று பாஜகவில் இணைந்த காங். வேட்பாளர்!

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது

திகார் சிறையில் கேஜரிவாலை சந்திக்க சுனிதாவுக்கு அனுமதி!

சமந்தாவிடம் இத்தனை கார்களா?

பாலியல் புகாரில் சிக்கிய தேவகௌடா பேரன்! நாட்டைவிட்டு தப்பினார்

SCROLL FOR NEXT