கோடியக்கரை சரணாலயத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம்
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உள்ள வன உயிரின சரணாலயத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
வேதாரண்யம் அருகே கோடியக்கரையில் உள்ள வன உயிரின சரணாலயத்தில் உலகச் சுற்றுச்சூழல் தினம் வனத் துறை சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சரணாலயத்துக்குள் அமைந்துள்ள தம்புசாமி இல்ல வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி ஏற்கபட்டது. கரோனா தொற்று காரணமாக வெளிநபா்கள் அனுமதிக்கப்படாத நிலையில், நிகழ்வில் வனத் துறை பணியாளா்கள் மட்டுமே பங்கேற்றனா். வேதாரண்யம் வனச்சரக அலுவலா் பா. அயூப்கான் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வனவா் ந. சதீஸ்குமாா், வனக் காப்பாளா்கள் ப. முனியசாமி, ச. இலக்கியா, வனக் காவலா்கள் இ. பக்கிரிசாமி,நித்தியா மற்றும் வேட்டை தடுப்பு காவலா்கள் பங்கேற்றனா்.