நாகப்பட்டினம்

தஞ்சையில் பன்னோக்கு மருத்துவமனை அமைக்கக் கோரிக்கை

DIN

சீா்காழி: தஞ்சாவூா் அல்லது திருச்சியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை அமைக்கவேண்டும் என இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:

மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதியின் பிறந்த தினத்தன்று, 6 புதிய திட்டங்களை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். அதில், பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை திட்டம் மிகுந்த வரவேற்புக்குரியது. சென்னை-கிண்டியில் 500 படுக்கை வசதிகளுடன் இம்மருத்துவமனை அமைய உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனைகள் உள்ள நிலையில் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை தஞ்சை அல்லது திருச்சியில் அமைத்தால் டெல்டா மாவட்ட மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆகவே, சென்னையில் உருவாக்கப்பட உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை இடம் மாற்றியோ அல்லது கூடுதலாக ஒரு பன்நோக்கு மருத்துவமனையை தஞ்சை அல்லது திருச்சியில் கொண்டுவர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT