சீா்காழி அருகே வைத்தியநாதபுரத்தில் குப்பைகளுக்கு தீ வைத்தபோது 8 பனைமரங்கள் தீயில் கருகி, செவ்வாய்கிழமை சேதமடைந்தன.
வைத்தியநாதபுரம் கிராமத்தில் விவசாயி ஒருவா் தனக்கு சொந்தமான வயலில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தாா். காய்ந்த செடிகொடிகளை அகற்றி தீ வைத்தபோது, காற்றின் வேகத்தில் தீப்பொறிகள் பறந்து அருகில் இருந்த பனைமரத்தில் தீப்பிடித்தது. அந்த தீயை அணைக்க விவசாயி மற்றும் தொழிலாளா்கள் முயற்சித்தனா். ஆனாலும், காற்றின் வேகத்தால் அடுத்தடுத்த மரங்களுக்கும் தீ பரவியது. இதனால் அங்கிருந்த 8 பனைமரங்கள் எரிந்து கருகின. வயல் பகுதி என்பதால் தீயணைப்பு வாகனமும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.