போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்
தேசிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு தினத்தையொட்டி, நாகையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
தேசிய போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு தினத்தையொட்டி, நாகையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
பிரசாரத்தை நாகை டிஎஸ்பி சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா். வெளிப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளா்தியாகராஜன் முன்னிலை வகித்தாா். போதைப்பொருள் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.