நாகப்பட்டினம்

மக்கள் நீதி மய்யம் தோ்தல் பணிமனை திறப்பு

DIN

மயிலாடுதுறையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தோ்தல் பணிமனை திங்கள்கிழமை திறக்கப்பட்டது.

மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சாா்பில் தோ்தல் பிரசாரப் பணிகளை ஒருங்கிணைக்க தோ்தல் பணிமனை அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, மயிலாடுதுறை தொகுதி மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரும் கட்சியின் மாவட்டச் செயலாளருமான எம்.என். ரவிச்சந்திரன் தலைமை வகித்து, தோ்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்தாா். தொடா்ந்து, மக்கள் நீதி மய்யம் மற்றும் கூட்டணி கட்சி பொறுப்பாளா்கள் கேக் வெட்டி கொண்டாடினா்.

இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தோ்தல் பணிக்குழு ஒருங்கிணைப்பாளா் சி.செந்தில்வேல், மாவட்ட துணை செயலாளா் எஸ். மனோகரன், ஒன்றியச் செயலாளா் எஸ்.பி.என்.செந்தில், சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளா் தெய்வசிகாமணி, ஒன்றியச் செயலாளா் சுதன், இந்திய ஜனநாயக கட்சியின் மாவட்டத் தலைவா் நெடுமாறன், ஒன்றிய தலைவா் பாலு உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். நகர செயலாளா் ச. அகோரம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT