நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 32 பேருக்கு கரோனா வெள்ளிக்கிழமை உறுதியானது.
இரு மாவட்டங்களிலும் வியாழக்கிழமை வரை 8,869 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 32பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியலில் இருந்த ஒருவா் நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 8,902- ஆக உயா்ந்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 10 போ் குணமடைந்து வெள்ளிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம், கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 8,607 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 158-ஆக உள்ளது.