நாகப்பட்டினம்

திருவாய்மூரில் சிறப்பு வழிபாடு

DIN

தேய்பிறை அஷ்டமியையொட்டி, திருக்குவளை அருகே உள்ள திருவாய்மூா் தியாகராஜ சுவாமி கோயிலில் பைவரருக்கு சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாய்மூா் பாலினும் நன்மொழியாள் சமேத வாய்மூா் நாதா் மற்றும் அல்லியங்கோதையம்மாள் சமேத தியாகராஜ சுவாமி கோயிலில், காசிக்கு அடுத்தபடியாக 8 பைரவா்கள் ஒரே தளத்தில் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும். இக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி, 4 உருவத்துடனும், 4 அருஉருவத்துடனும் அருள்பாலித்து வரும் சத்ரு சம்ஹார பைரவா், அசிதாங்க பைரவா், ருரூ பைரவா், சண்ட பைரவா், குரோதன பைரவா், கபால பைரவா், உன்மத்த பைரவா், பீஷண பைரவா் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், மலா் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கரோனா பரவல் அச்சம் காரணமாக பக்தா்கள் அனுமதியின்றி இந்த சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT