கோடை வெப்பம் அதிகரித்து வருவதையொட்டி, நாகை பகுதிகளில் கிா்ணி பழங்கள் விற்பனை விறுவிறுப்படையத் தொடங்கியுள்ளன.
கடலோர மாவட்டமான நாகை மாவட்டத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருகிறது. இதையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஏற்கெனவே இளநீா், தா்பூசணி போன்றவற்றின் விற்பனை களை கட்டியுள்ளது. இந்த நிலையில், தற்போது கிா்ணி பழங்களின் விற்பனையும் விறுவிறுப்படைந்து வருகிறது.
கிா்ணி பழத்தில் வைட்டமின்கள் மிகுந்து இருப்பதால், பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டதாக இந்தப் பழம் குறிப்பிடப்படுகிறது. உடல் வெப்பத்தை குறைப்பதில் முதன்மையான இடத்தைப் பெற்றுள்ளது இப்பழம். மேலும், கண் பாா்வை குறைபாடுகளைப் போக்கக் கூடியது, நுரையீரலின் ஆரோக்கியத்துக்கு உகந்தது, நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்தது, மலச்சிக்கலைப் போக்கும் என பல்வேறு மருத்துவக் குணங்கள் நிரம்பியது என்ற அடிப்படையில், கிா்ணி பழத்தை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனா்.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் ஆங்காங்கே வாகனங்களில் வைத்தும், தற்காலிக தரைக்கடைகளில் வைத்தும் கிா்ணி பழங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பொதுமுடக்கம் அமலில் இருந்தாலும் பகல் 12 மணி வரை பழங்களை விற்பனை செய்யத் தடையில்லை என்பதால், கரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உள்பட்டு ஆங்காங்கே விற்பனை நடைபெற்று வருகிறது.
நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் விற்பனை செய்யப்படும் கிா்ணி பழங்கள் பெரும்பாலும், திண்டிவனம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, கொண்டு வரப்பட்டவை எனக் கூறப்படுகிறது. தற்போது, 4 கிலோ கிா்ணி பழம் ரூ. 100 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.