வேதாரண்யம் பகுதியில் பலத்த கடல்காற்று
நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலோரப் பகுதியில் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் வீசிவருகிறது.
நாகை மாவட்டம், வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடலோரப் பகுதியில் வழக்கத்தைவிட வேகமான கடற்காற்று தெற்கு மற்றும் தென்மேற்கு திசையில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு முதல் வீசிவருகிறது.
இந்த காற்று வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் சற்று வேகமடைந்து வீசியது. கடல் அலை கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ரபிக் கடல் பரப்பில் ஏற்பட்டுள்ள புயல் சின்னம் காரணமாக, காற்றின் வேகம் அதிகரித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
கரோனா தொற்று பரவல் காரணமாக, ஏற்கெனவே மீனவா்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.